5
மாதவன் விசும்பி அழும் காயத்ரியின் தலையை கோதி
விட்டுக்கொண்டு இருந்தான் கொஞ்ச நேரம் அழட்டும்
என்று அமைதியாக இருந்தான்
சிறுத்தையாகவும் மானாகவும் ஒருவரே இருப்பது
எப்படி சாத்தியப்படுகிறது என்று ஆச்சரியப்பட்டான்.
கூடல் முடிந்து என்றுமே காயத்ரி தூங்குவது இல்லை அவனை தூங்க விடுவதும் இல்லை ஆனால்
இன்று அழுகை ஓய்ந்து அப்படியே ஒரு மரவட்டையைப்போல் தூங்கிக்கொண்டிருக்கும் அவளை பார்க்க
மிகுந்த கவலையாயிருந்தது எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு
வசந்தபவனுக்கு போய் அவளுக்கு பிடித்த அனைத்தும் பார்சல் வாங்கித்திரும்பினான். பூனைபோல
திரும்பிவந்து தட்டு வைத்து டேபிளில் பரப்பி வைத்தான் வேஸ்டுப்போட ப்ளேட்டு வைத்தான்
தண்ணீர் எடுத்து வைத்தான் காயத்ரி எழும்பட்டும் என்று காத்திருந்தான் Untime தூங்கிவிட்டு, இரவு முழுவதும்
தூங்காமல் நாளையும் பாங்கில் Cranky behave பண்ணகூடாதே என கவலைப்பட்டான்
கண்விழித்த காயத்ரிக்கு எதோ ஒரு கனவு போல இருந்தது எத்தனை நேரம் தூங்கி
விட்டேன் அகாலத்தில் ... அகாலத்தில் தான் தனக்கு எல்லாம் நடப்பதாய்ப்பட்டது
காயத்ரிக்கு
மாது ஏறிட்டு பார்த்த பார்வையில் கேள்வி இருந்தது நிறைய அக்கரையுமிருன்தது.
முகம் கழுவிவிட்டு வந்தவள் டைனிங் டேபிளில் இருந்த
சில்லி போறாட்டா பொங்கல் குலோப்ஜாமுன் பார்த்ததும் ஹையா என ஓடிவந்து உட்கார்ந்து விட்டாள். சப்பிட்டுக் கொண்டிருந்தவளையே
பார்துக்கொண்டிருந்தவனிடம் போனால் போகுது நீயும் கொஞ்சம் சாப்புட்டுக்கோ என்றாள்
“என்னத்த மனசுல போட்டு ஒழப்பிட்டு இருக்கேப்பா ? “
ஒண்ணுமில்லே காலையிலே அம்மா கால் பண்ணி இருந்தாள்
“ம் ம் ம்”
உன்னை பற்றி தப்பா எல்லாம் கேள்விப்படறேனடி நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோயேன்னு ஓன்னு அழுதாள்
“என்ன தப்ப கேள்விப்பட்டே"
அதை என் வாயால
எண்டீ சொல்ல வைக்கிறே
சொல்லாதே நானே
சொல்றேன் .ஒரு சின்ன பையனை வைச்சுட்டு இருக்கேன்னு தானே
சொல்றா
நெருப்பில்லாம
பொகையாதுடீ
ஆமா ஒரு சின்ன பையனை தான் வைச்சுட்டு இருக்கேன். உனுக்கு கேவலமா இருந்தா இனிமே கால் பண்ணாதே. உனக்கு காயத்ரி என்றொரு
பெண்ணிருந்தாள் என்பதையே மறந்து போ.
கோபமும் ஆத்திரமும் வந்தது கூடவெ சுயவிரக்கமும். சின்ன பயனை வச்சிட்டி ருந்தா
தான் கேவலமா? தன்னை விட ஒரு இருவது வயது
மூத்தவனுக்கு இரண்டாவதாய் வாக்கப்பட்டால் உத்தமி .
அம்மாவின் மேலுள்ள கோவம் காபி டம்ப்ளேரை எட்டி உதைத்தாள்
இவர்கள் வற்புறுத்தல்களுக்காக ஓரிரு ஆட்களை இரண்டாவதாய் பெண்பார்க்க சம்மதிதத்ண்டு மாது .
கல்யாணமே
வேண்டாம்னு இருந்தான் நாங்க தான் ரொம்ப compell பண்ணி சம்மதிக்க
வைத்தோம் பிள்ளைகளுக்காக ஒத்துகிட்டான்" ஒரு மாமி நீட்டி முழக்கினாள். பொண்டாட்டி செத்து ஆறு மாசம் கூட ஆகலை வேண்டாம் வேண்டாம் என மறுத்தானாம்
மயிராண்டி. அவளை கொன்னாலும்
கொன்னிருப்பான். மூஞ்சை பாத்தாலே கெட்டவனாக தெரிந்தது. காபி கொடுக்க
குனிந்தால் மாரை பார்த்தான்.
இன்னொருவன் லேட்டா தான்
கட்டிக்கிட்டானம் அஞ்சு வருஷம் குடித்தனம் பண்ணிய பொண்டாட்டி
ஆட்டோகாரன் கூட ஓடிட்டாளாம் .நேராக கண்ணை பார்த்தல் நெளிகிறான் உள்ளே தனியா கூட்டிடுப்பொய் செக் பண்ணிப்பக்க ஆசை வந்தது
கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும் இரண்டாவது தானே அனுசரித்து போயேன் காயத்ரி
என்று அம்மா சொன்னாள். இங்கே பெரும்பாலார்
அனுசரித்துத்தான் போகிறார்கள் குடிகாரனை அடிக்கிறவனை கடும் கஞ்சனை, ஸ்த்ரீலோலனை. கல்லானாலும் கணவன் புலானாலும்
புருஷன் my foot. இப்படி சொல்லி சொல்லியே ஒரு சமூகத்தை கெடுத்து வைத்திருக்கிறார்கள் . நடக்க முடியாத
கணவனை கூடையில் வைத்து கூத்தியா வீட்டுக்கு கூட்டிப்பொனால் உத்தமி
நானும் எத்தனையோ பொறுத்துதான் போனேன் மாது அந்த தடியனை. என்னை வேதனைபடுத்துவதை
அவன் ரசித்தான். வாயெடுத்தால் தேவடியா என வைதான்
வேலைக்கு போவதால் தான் திமிரென்றான். அத்தனையும் சகித்துக்கொண்டேன். நான் வேண்டாம்
என்று கெஞ்சியும் விடாமல் என்னை வன்புணர்தலை என்னால் ஏற்க்க முடியவில்லை மாது. மனசு
கூனி குறுகி ஒரு புழு போல அவமானப்பட்டு விட்டேன். இரண்டு வருஷம் அவன் கூட சகிச்சது
என் மடத்தனம். ஒரு நாள் அவனை கொலை செய்து விடுவேனோ என்ற பயத்தில் தான் வந்து விட்டேன். எப்படியெல்லாமோ
அம்மா மீண்டும் அனுப்பிவிட முயற்சித்தாள்.
அந்த தடியனும் அத்தையும் வந்து எப்படியாவது அனுப்பி வைங்கோன்னு வந்து கேட்டா. சின்ன
மனஸ்தாபங்கள் இருக்கத்தான் செய்யும் இப்படியா பொசுக்குன்னு பொம்பளை வந்துருவா. ஒரு
குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாயிடாதான்னு நீட்டி முழக்கினாள். அவனுடன் ஒரு குழந்தை
என்றதும் எனக்கு வாந்தியாக வந்து விட்டது.
நான் முடிவாய் மறுத்து விட்டேன்.
ஒரு பெண் வாழா வெட்டியாய் இருப்பது கேவலம் தாலி கெட்டி பூ வைத்தல் தான் உயர்வு. வாழாவெட்டி
என்ற வார்த்தை மிகுந்த கோபத்தைக்கொடுத்தது கணவனை பிரிந்து விட்டால் வெட்டியா? ஏன் வாழ முடியாதா? நான் வாழ்கையை எனக்கு பிடித்தது போல வாழப்போகிறேன் நீ உன் வேலையைப்பாத்திட்டு
போன்னு ஏசி விட்டபின் இன்றும் கால்பண்ணி ஒரே ரோதனை
இவளின் rebellion against
the social norms என்பது வெறும் பாசாங்கு தானா? தானே தன் வாழ்கையை தனக்கு பிடித்தவனுடன் தனக்கு
பிடித்த விதத்தில் வாழ்வது இங்கு இயலாத காரியமா?
மாது அவள் மூடை மாற்ற ஆசைப்பட்டான்
“என்ன காயி
வேஜிட்டேரியன்னு நினைச்சுட்டு இருந்தேன் கடிச்சு ரத்தம் குடிச்சிட்டியே”
“செய்த காரியங்களை சொல்லிக்காட்டாதேன்னு
எத்தனை முறை சொல்றது“
“வலிக்குதே என்ன செய்ய”
“உதட்டில் கடித்ததோடு விட்டேன் என சந்தோஷப்படு
அங்கே கடித்திருக்க வேண்டும்”
“நீ செய்தாலும் செய்திருப்பாய். என்ன ஒரு புயல்
போல வேகம்”
“மருந்து போட்டு விட்ரவா என்ற குரலில் விசமம் இருந்தது”
“அம்மா தாயே ஆளை விட்ரு”
“என்னை பார்த்தா
உனக்கும் பயமா இருக்கா மாது” என்ற குரலில் இருந்த ஆதங்கம் அவன் மனசை
பிசைந்து போட்டது +