கார் பாலஸ்
ஹோட்டலில் நுழைந்தது. வாசலிலேயே வரவேற்றனர் சூட் புக் ஆகியிருந்தது பத்தாவது மாடி அழகான
பால்கநியுடன் காயல் பார்த்த ரூம்... இப்படி ஒரு வீட்டில் மனதுக்கு பிடித்தவனுக்கு வப்பட்டியாகவாவது
வாழவேண்டும் என்ற எண்ணம் ராணிக்கு ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது... கனவிலும் வப்பாட்டிதானா!
எல்லா மலர்களும்
பூஜைக்காக படைக்கப்படவில்லையோ தான் சேற்றிலேயே
பிறந்ததனால் எண்ணங்களும் சேறாகவே வருகிறது. தன்னையே தேடி ஓரிருமுறை வந்து உன்னை கல்யாணம்
பண்ணிக்கொள்கிறேன் என்றவர்களை வெத்தலை விரட்டி அடித்துவிட்டாள்.
“ராணி நீ
பொய் குழித்துவிட்டு வா”
ரொம்ப நாசுக்கானவன், ஆப்பிள் மாதிரி ஆளையும் கழுவிவிட்டு தான் கடிப்பான்
போல, ஸ்க்ரீனை
இழுத்து விட்டுட்டு குளிப்பதை பார்பதாக எண்ணமோ என்னவோ.
பளபளப்பான
குளியலறை காலில் கூசியது ஷவரை திறந்தால் தண்ணீர் சில்லென பூமாதிரி உதிர்ந்தது கேப்பை
அணிந்து கொண்டாள் வெண்ணீர் கலந்து உடலெங்கும் ஒரு வருடல் போல கொட்டிய இதமான நீரை அனுபவித்தாள்
எந்நேரம் வேண்டுமானாலும் வந்து சில்மிஷம் செய்யலாம் என நினைத்தாள்
ஒரு அரவமும்
இல்லை ஸ்க்ரீனை இழுத்து பார்த்தாள்,பார்த்தால்
பார்த்துக் கொள்ளட்டும் இவ்வளவு செலவு செய்கிறானே
ராணி உத்துபார்த்தாள் பால்கனியில் உட்கார்ந்து நிதானமாக சிகரெட் இழுத்து
கொண்டிருன்தது. ஓன்று ஏற்கனவே ஆஷ்டிரயில் நசுக்கி போட்டிருக்கிறது எதோ ஆலோசனை போல, இது தன்னை எதற்கு கூட்டி வந்திருக்கிறது என்று
மீண்டும் ஒரு சந்தேகம். தனக்கும் ஒரு தம்மடித்தால் தேவலை என தோணியது.
தும்பை
பூப்போல இருந்த துண்டில் துவட்டி டிரஸ் மாற்றி வெளியே வரவும் பெல் கேட்டது சாப்பாடு வந்திருந்தது ரெண்டு பேருக்கு இவ்வளவா?
குளிக்க
போனது காக்கா குளியல் போட்டுவிட்டு வந்தது.தட்டை எடுத்து வைத்து பரிமாரசொன்னது தயங்கிக்கொண்டே எடுத்து வைத்தாள். குளித்து பிரெஷா
பரிமாறும் போது ஒரு சின்ன பாசம் வந்திருந்தது. ஸ்பூன் வைத்து சாப்பிடும்னு நினைச்சா
கைவைச்சு பெரிய கவளமாக எடுத்து சாப்பிட்டது. ஒவ்வொரு ஐட்டம்ஆக எடுத்து பரிமாறியது.
இத்தனை அருகில் இருந்து ஒரு ஆண் பரிமாற உண்டதேயில்லை. நல்லா இருந்தது, தான் ரெண்டு
நாள் வாடகைக்கு வந்திருக்கிறோம் என்பதை ராணி மறந்து போனாள்.
பெருவாரியான
உணவு மீதமிருந்தது பேரர் எடுத்துட்டு போனான். ரெண்டு சாய்வான நாற்காலிகள் கொண்டு பால்கனியில்
போட்டது.
"ராணி உனக்கு டயர்டு ஆக இருந்தால் தூங்கிக்கோ"
“எனக்கென்ன
டயர்டு உங்களுக்கு எதுவும் வேண்டாமா?”
“வேணும்
தான் ஆனால் உனக்காக தோணவேண்டும்
இங்கே வந்து
எதிரில் உர்கார்.”
எனக்கு
விருப்பம் தான் என்ன வேண்டும் சொல்லுங்கள் செய்கிறேன்
ஒரு சிகரெட்டை
பத்தி என்னிடம் நீட்டியது என் மனதையே படித்தது போல. ராணி வாங்கி ஒரு இழுப்பு இழுத்து
விட்டாள். வெத்தலைக்கு ராணி புகைப்பது பிடிக்கவே பிடிக்காது
ராணி நீ
என்கூட துபாய் வாரியா?
என்ன விளையாட்டா வெத்தலை கொன்னுரும்
அதை நான்
பாத்துக்கிறேன் வைச்சுக்கிறதுக்கு இல்லை உன்னை கட்டிக்கிறேன் வெத்தலை கேக்ரதை கொடுத்து
உன்னை கூட்டி போகிறேன்
இவனுக்கு
நிச்சயம் பைத்தியம் தான். ஆளை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இல்லைன்னு சொன்னா
இங்கிருந்து கீழே பிடித்து தள்ளி கொன்னுருவனோ என்னவோ. விரல் நுனி கூட என் மேல படல அதுக்குள்ளே
கட்டிகிறேங்கிறான்
“ஏன் துபாயில
கிடைக்காதா”
“கிடைக்குமே
வகை வகையாய் அத்தனை கலரிலும் அத்தனை தினுசிலும் நிறைய பார்த்திருக்கிறேன்”
“பின்னே
எதற்கு நான், செலேவில்லாமல் வைத்தியமா? ஊரில நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிறது
தானே”
“எனக்கு
யார் மீதும் நம்பிக்கை இல்லை”
“என் மீது
மட்டும் என்ன”
சிகரெட்
குடிக்கப்படாமலே கரைந்து கையை சுட்டது.
உன் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் அவசியமில்லை எதிர்பார்ப்புகள் அற்றதனால் ஏமாற்றம் எதுவுமில்லை. பத்தினித்தனம் ஒரு நாடகமாக எனக்கு படுகிறது. விளையாட்டுக்கு
இல்லை நிஜமாகத்தான் கேட்டேன்
எங்கிருந்து
வந்ததென்று தெரிய வில்லை மழை தூரல்...
ராணிக்கு
முதல் முறையாக அவனை பார்க்க பாவமாக இருந்தது
அவனை சமாதானப்படுத்த வேண்டும். இவனை சாந்தப்படுத்த வேண்டும் என
நினைத்துக்கொண்டாள். கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தாள் தன உடைகளை களைந்து ஷீட்டுக்குள்
நுழைந்தாள் அவனையும் அவ்வாறே செய்யசொன்னாள். மறு கேள்வியில்லாமல் செய்தான். வெற்றுடம்பில்
அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் வாயில் முத்தமிட்டாள் சிகரட் வாசனை சுகந்தமாக மணத்தது.
- தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக