ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அடிமையாய் நான் - 8



..... 8 ....

பாட்டிக்கு இரவு ஓட்ஸ் கஞ்சியும் அப்பளமும் கொண்டு வரும் கண்ணனை ஆச்சர்யமாக பார்த்தாள் பாட்டி

அத்தை எங்கப்பா?

உடம்பு சரியில்லை பாட்டி. ஏன் நான் கொடுத்த பிடிக்கலையா ?

இன்றைக்கு நானே ஊட்டி விடுகிறேன் நீ மட்டும் சின்ன பிள்ளையில் எனக்கு ஊட்டி விடுவேல்ல

ஆமா இப்போ மட்டும் பெரிய ஆளாயிட்டியோ. அந்த நாரத்தை உறுகாய் கொஞ்சம் கொண்டுவாடா கண்ணா கல்யாணி BP நு சொல்லி தரவே மாட்டாள்

ஒரு யுகம் போல தூங்கி எழுந்த கல்யாணி தான் கண்ணனின் பெட் டில் உறங்கியது கண்டு துணுக்குற்றாள் துக்கம் எல்லை மீறி போகும் போதெல்லாம் ஒரு நீண்ட போதமற்ற தூக்கம் ஒரு வரம் போல வாய்த்திருந்தது

கண்ணன் பாட்க்கு ஊட்டி விடுவதை பார்த்து பரவசம் ஆகி விட்டாள்  நடந்து முடிந்தவை ஒரு கனவு போல மனதுக்குள் வந்து போனது

இவனும் ஒரு ஆண் தான் இவனுக்கு மட்டும் எப்படி ஒரு நல்ல மனது. மனதுக்கு இதமாய் நடந்து கொள்ள யார் இவனுக்கு சொல்லிக்கொடுத்தது. யாராவது தன்மாரை உன்னித்து கவனித்தால் கன்னத்தில் அறையும் ஆத்திரம் இவன் பார்த்தால் மட்டும் ஏன் வருவதில்லை என ஆச்சர்யப்பட்டாள்.

தலை வலி பரவாயில்லையா
இன்னைக்கு நான் தான் டின்னெர் பண்ணியிருக்கிறேன் மூஞ்சை கழுவிட்டு வாங்க

ஹையா ... உனக்கு இதெல்லாம் யார் சொல்லிக்கொடுத்தது என்ன செய்திருக்கிறாய் கல்யாணி ஆவலுடன் kitchen போயி பார்த்தாள் தோசை மாவும் தக்காளி சட்னியும் ரெடியாக இருந்தது 

கல்யாணி வருவதற்குள் பாட்டிக்கு ஊட்டிவிட்டு கல்லில் தோசை வார்த்தான் பிய்ந்து வந்ததை தூக்கி போட்டு வேறு ஊற்றினான்

கல்யாணி சோபாவில் கால் மடக்கி அமர்ந்து கொண்டாள். ஒரு விள்ளல் எடுத்து சட்னியில் தோய்த்து வாயில் இட்டாள் புரை ஏறியது பாட்டி அவள் தலையில் தட்டி விட்டாள் கல்யாணி கண்களை துடைத்துக்கொண்டாள்.

கல்யாணி கண்ணீரின் காரணம் சட்னியின் காரமா என அறியாது கண்ணன் முழித்தான். பெண்களின் கண்ணீரின் காரணம் பல ஆண்களுக்கு புரிவதே இல்லை. பல லட்சங்கள் கொடுத்தாலும் கிடைக்காத திருப்தி ஒரு சிறு செயலில் வார்த்தைகளின் கனிவில் அவர்களை உருக வைத்து விடுவதை அறியும் சூட்சுமம் இல்லை. பொன்னும் பொருளுமாய் செலவிடும் ஆண்கள் ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த ஒரு சிறு செயல் போதும் என்பதை அறிவாரில்லை

சாப்பிட சாப்பிட எங்கிருந்தோ ஒரு துக்கம் வந்து கல்யாணிக்கு தொண்டையை அடைத்தது. சின்ன பிள்ளை இவன் இத்தனை விஷயங்கள் இவனிடம் சொன்னது தவறென்று பட்டது

சொர்ரென்று புரையேறி உயிரே போய்விடுவது போல அடைத்தது கண்ணன் ஓடிப்போயி தண்ணீர் கொண்டு வந்தான் மெதுவாக தலையை தட்டி விட்டான். புரையேறிய அதிர்ச்சியில் விலகியிருந்த சேலைத்தலைப்பால் வெளிப்பட்ட அவள் மார்விளிம்புகளை நோட்டமிட்டான். அவ்வாறு செய்ததற்காக வெட்கப்பட்டான்

பாட்டி தூங்கி விட்டிருந்தாள்

“எனக்கும் ஊட்டி விடேன் கண்ணா

கண்ணன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்கு ஊட்டி விட்டான்  கல்யாணி விலகிக்கிடந்தசேலையை சீராக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை ஊட்டிவிடும் அவன் விரல்களை எச்சில் பட வாயில் வாங்கிக்கொண்டாள்

“என் வாழ்கையில் எனக்கு ஒரு வாய் யாரும் ஊட்டி விட்டது இல்லை கண்ணா
கண்ணனுக்கு சங்கடமாக இருந்தது.

“கடந்துபோன வாழ்க்கையின் அட்தியாயங்களை நீங்கள் மறக்கவேண்டும் கல்யாணி

“நானும் எவ்வாளவோ முயன்று தான் பார்க்கிறேன் கண்ணா என்னால முடியலையே

“உங்கள் தற்போதைய வாழ்வின் சவ்கரியங்ககளை நினைத்துப்பாருங்கள் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை எண்ணிப்பாருங்கள்

“எனக்கு இத்தனை நல்ல வாழ்கை அமையாமல் இருந்திருக்கலாமோ என்று எண்ணம் வருகிறது. அன்றாடம் காச்சியாய் தினம் ஆயிரம் கவலைகள் இருந்திருந்தால் மனம் பின்னோக்கி போகாதிருந்திருக்கலாம்

"இன்னும் ஒரு தோசை கொண்டு வரவா கல்யாணி"

"ம்ம்"
வேகமாக சமையலறையினுள் சென்றான் மீண்டும் அடுப்பை பற்றினான் கல் சூடானதும் மாவு ஊற்றினான் கல்யாணி அவன் பின்னாலே வந்தாள் அவன் செயல்கள் ஒவ்வொன்றையும் கவனித்தாள்

எதோ யோசனையில் ஆழ்ந்த கண்ணன் திருப்பும் அகப்பை நெருப்பின் மீதிருந்து சூடானதை கவனிக்காமல் அதை தொட்டான் கையில் சுட்டுவிட Oh shit என உதறிக்கொண்டான்

கல்யாணி பதறிப்போனாள் அவன் விரல்களை பற்றி கொஞ்சம் சுகர் தடவினாள்

உனக்கு ஏன் இந்த வேலை நான் சுட மாட்டேனா ? என கோபப்பட்டாள்

இல்லை கல்யாணி எனக்கு பழக ஆசை வாரத்தில் ஒரு நாள் ஏன் மனைவிக்கு சமைத்து போட ஆசை

‘நல்ல ஆசை தான் அதே போல ஒரு நாள் நோயாளிகளுக்கு ஊசி போட உன் மனைவி ஆசைப்பட்டால் என்ன செய்வாய்

‘ஒரு டாக்டரை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட்டால் போச்சு

‘ஏதாவது பாத்து வச்சிருக்கியோ அதை கேட்கும் போது ஒரு சின்ன பொறாமை வந்து விட்டது கல்யாணியை ஆச்சர்யப்படுத்தியது

தோசை ரெடி மீண்டும் வந்தமர்ந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

“ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே

“மாட்டேன் சொல்லுங்க என்ன சொன்னாலும் கோவிச்சுக்கமாட்டேன். உங்கள் மனசில இருக்கிரதேல்ல்லாம் என்னிடம் சொல்லுங்கள் கல்யாணி

எனக்கு உன்னை மாதிரி ஒரு கணவன் கிடைத்திருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது கண்ணா என்னை நானே கடிந்து கொள்கிறேன் உன்னைப்போல கெட்டுப்போனவளுக்கு இந்த எண்ணம் தேவையா என இன்னொரு மனம் திட்டுகிறது நான் தனிமையில் இருக்கும் போது இன்னொரு நானும் கூட இருப்பது போலிருக்கிறது நாங்கள் இருவரும் பேசிக்கொள்கிறோம் சணடையிடுகிறோம். ஒரு வேளை எனக்கு பயித்தியம் பிடித்து விடுமோ கண்ணா

எல்லோருக்கும் அப்படி நடப்பது தான் கல்யாணி  நீங்கள் கேட்டுப்போனதாய் நினைப்பதை கைவிட்டே ஆகவேண்டும் உங்களுக்கு நடந்தது உன் மீது திணிக்கப்பட்டது கல்யாணி அதற்க்கு நீங்கள் பொறுப்பில்லை.

கண்ணன் பேச்சை மாற்ற ஆசைப்பட்டான். அடுத்த வாரம் Educational Tour என்ற பெயரில் Bombay போவது பற்றி பேசினான்.

உங்களுக்கு என்ன வாங்கி வர கல்யாணி

“நான் சொல்லாமலே எனக்கு பிடித்த ஓன்று வாங்கி வாயேன் பார்ப்போம்

Ok ட்ரை பண்றேன் இப்போ நல்ல பிள்ளையாய் போயி தூங்கு கல்யாணி

ரொம்ப நன்றி கண்ணா என்றவள் அவன் எதிர்பார்க்காத தருணத்தில் அவன் தலையை கைகளால் பற்றி அவன் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள் கண்கள் கலங்கி இருந்த கல்யாணி  விடு விடென்று திரும்பிப்பார்க்காமல் நடந்தாள்
கண்ணன் டைனிங் டேபிளில் அப்படியெ வெகு நேரம் உறைந்திருந்தான்


 - தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக