பாட்டி சோபாவில் இருந்தே உறங்குகிறாள். கல்யாணி சொன்ன அந்த வார்த்தைகள்
என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவ்வாறு சொன்ன பிறகு அவள் cleavage பார்ப்பதில் சங்கடம் இருந்தது.
காலேஜ் எப்படா முடியும் கல்யாணியுடன் பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருக்கும். என்ன கேட்டாலும்
தயங்காமல் பேசுகிறாள். நிறைய கேள்வி கேட்பாள்
என் பதிலை உன்னிப்பாக கவனிப்பாள். தீவிரமான கேள்வி ஓன்று கேட்டுவிட்டு நீளமான பதிலை
பாதியிலேயே கவனிக்காமல் அசையும் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தவனை சிரித்துக்கொண்டே
பட்டென்று அறைந்தாள். சிறிது வலித்தாலும் நிரம்ப சுகம்.
ஒரு அழகான பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது இந்தனை போதைஊட்டும்
செயலென்பது உணர்ந்தால் தான் தெரிகிறது. குரூப் ஸ்டடி ஹோம் staynu வந்திருந்த கிளாஸ் மேட்களுக்கு இப்படி பேச தெரிந்திருக்க வில்லை. ஒரு நாள் கேட்டேன்
“நீங்கள் ஏன் டீனேஜர்
போல என்னிடம் பேசுகிறீர்கள் உங்கள் வயசை மறக்க நினைக்கும் உத்தியா?”
“டீன்ஏஜ் எனஓன்று எனக்கு வாய்க்கவில்லை கண்ணா” சொன்ன குரலில் ஒரு டன் வருத்தம்.
அது எனக்கு இறந்த காலம் நான் வெட்கப்பட்டுக்கொண்டு தத்தியாய்
திரிநததில்லை. சின்ன வயசிலேயே உழைக்க வேண்டி
இருந்தது. பேன்க் போஸ்ட் ஆபீஸ் EB பில் கட்டுவது எல்லாம் நான் தான்.பொறுப்புகள்
என் இளமையை கொன்றுபோட்டது
“இத்தனை அழகாய் இருந்து கொண்டு காலேஜிலும் படித்து யாருமே உங்களை
காதலிக்க வில்லையா?”
“எல்லோரும் காதலிக்க ஆசைப்பட்டார்கள் எனக்கும் ஒன்றுரெண்டு பேர்
பிடிக்கும். ஆனால் யாருக்குமே எட்டாமல் பார்த்துக்கொண்டேன்”. எனக்கு ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்களாகவே
தெரிந்தனர்
பணக்கார ஹீரோ ஒருவன் என்னை மடக்கி எல்லோரிடமும் பேரெடுக்க ஆசைபட்டான்
நான் பயன்படுத்திக்கொண்டேன். கெஞ்சி கூத்தாடாமல் ஒரு புன்னகை கூட கொடுத்ததில்லை. லஞ்ச், நல்ல டிரஸ், ஸ்கூல்
பீஸ் வாட்ச் என் அத்தனை செலவுகளையும் கவனித்துக்கொண்டான். அவன் ஈகோவை நான் கவனித்துக்கொண்டேன்.
இதை நான் சொல்லவேண்டாம் தான் ஆனால் உன்னிடம் சொல்ல தோனுகிறது.
“இது தப்பில்லையா?”
“தப்புதான் கண்ணா”
“தப்புதான் கண்ணா”
“ஒரு வகையில் வேசித்தனம் தான்”
தெரியாமல் செய்திருபீங்க இப்ப வருத்தம் இருக்கும் தானே.
தெரிஞ்சே தான் செய்தேன் கண்ணா எனக்கு பாதுகாப்பும் தேவைப்பட்டது
தகப்பன் இல்லாது மூனு பொட்டபுள்ளைகள் வளர்வது ரொம்ப கஷ்டம் கண்ணா
!
பின்னே அவனை காதலித்து கல்யாணம் பண்ணியிருக்கலாமே
காதல் என்பது 2+2=4 என்ற கணக்கில்லை கண்ணா. எனக்கு அவன் மேல்
கொஞ்சமும் நம்பிக்கை இருந்தது இல்லை. சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொடுவான் அவன் நண்பர்கள் என்னை பார்க்கும் விதத்தில் கண்ணியமே
இருந்ததில்லை. எப்படியும் என்னை வீழ்த்தி விடலாம்
என எண்ணி இருந்தான்.
இத்தனை செலவு செய்தவன் அடையாமல் விடுவானா? எப்படித்தான்
முடிந்தது?
இனி மேலும் இவனை சமாளிக்க முடியாது என்றவுடன் மிக சாதுர்யமாக
விலக முடிவு செய்தேன். கல்யாணத்தை பற்றி பேசினேன் அவன் குடும்பத்துக்கு அறிமுகபடுத்த
வற்புறுத்தினேன் அவன் என்னை திருமணம் பண்ணாவிட்டால் சாவதை தவற வேற வழியில்லை என்றேன்.
போனில் வீட்டில் தெரிந்துவிட்டது என
அழுதேன். கட் பண்ணிவைப்பவனுக்கு மேலும் மேலும் போன் பண்ணினேன்
நினைத்த படியே பயந்துவிட்டான் இந்த பெண் தன்னை வளைக்க பார்க்கிறாள்
என்று நினைத்து விட்டான். பெண் அதிக ஆர்வம் காட்டினால் ஆண் விலகி ஓடி விடுவான்.
பிறகு அவன் தொந்தரவே இல்லையா?
இருந்தது காலேஜ் முடிந்த பிறகும் அப்பப்போ கால் பண்ணி பேசுவான்
ஒருநாள் கோயிலுக்கே வந்து விட்டான். இன்னொருமுறை வீட்டு பக்கம் வந்தால் அவன் கொடுத்த
கிfப்டு அத்தனையும்
எடுத்துகிட்டு அவன் அப்பனிடம் போய் நான் முளுகாமலிப்பதாய் சொல்லிவிடுவேன்னேன் அன்னைக்கு தொலைஞ்சவன் தான்
உன்னை சாரி உங்களை பார்த்தல் சில சமயம் பயமா இருக்கு கல்யாணி.
எனக்கு கெடுதல் செய்யாத யாரையும் மனதாலும் வருத்தப்படுத்தியது
இல்லை கண்ணா. என்னை மனம்வருந்த செய்த யாரையும் நான் கதரடிக்காமல் விட்டதுமில்லை
பொழுது போக்குக்கு
காதலிப்பவர்களே இங்கு அதிகம். பெண்களை எளிதில் ஏமாற்றி விட நினைக்கிறார்கள் . அவனை நல்லவன்னு நினைச்சன்னு
வயத்துல பிள்ளையும் வைச்சுட்டு கண்கலங்கற பொம்பிளைகள் மீது எனக்கு மிகுந்த கோபமுண்டு. தன்னை
இழந்துவிட்டு என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டு அலைவது பிசைஎடுப்பதர்கு
சமம் அதனால் தான்
ஏதாவது கொடுத்தனுப்புங்கள் என்று பஞ்சாயத்து பண்ணுகிறார்கள் . ஒரு நாளில்
தெரிந்துவிட வேண்டும் ஒருவனின் அகலட்சணம்.
உணர்ச்சி வசப்பட்டு
உச்சஸ்தாயியில் பேசும் கல்யாணி கண்ணகி போல் தெரிந்தாள் முலையை திருகி வீசினால்
இப்போதும் மதுரை எரியும் போலத்தானிருன்தது.ஆனால் கோபம் மிகவும்
ஞாயமாய் பட்டது.
வசதி இல்லாததால் தான் சக்திவேல் அங்கிளை கட்டிக்கிட்டீங்களா?
உங்கள் சக்திவேல் அங்கிளை
கட்டிக்கிட்டது கூட பிராயச்சித்தம் மாதிரிதான். உனக்கு மிகவும் மரியாதைக்குரிய
பெரியவர் ஒருவருக்கு நான் கொடுத்துக்கொண்டிருக்கும் தண்டனையும். நான் சொல்வதை மட்டும்
கேட்டுக்கொள் வேறெதையும் நான் சொல்ல மாட்டேன் உங்க அப்பா வந்து தயங்கி தயங்கித்தான்
கேட்டார் எங்கம்மாக்கே ஆச்சர்யம் நான் சரின்னு
சொன்னது.
சக்திவேல் அங்கிள் அப்பாவின் தாய்மாமனின் ஒரே மகன்.
கல்யாணியின் பக்கத்து வீடு. படிப்பும் ஏறல வீடு வெளியே போகமட்டார். அப்பா தான் இந்த
எலெக்ட்ரிக் கடை வைத்து கொடுத்திருக்கிறார். குஜராத்திலிருந்து சரக்கு அனுப்புகிறார்
தெரிந்த நண்பர்களிடம் சொல்லி வாங்க வைக்கிறார். அங்கிள் தினமும் கலையில் துங்கு முஞ்சியாகவே
இருக்கிறார். குண்டாகிகொண்டே பொய் ஒருநாள் வெடிக்கத்தான்
போகிறார்
“சக்திவேல் அங்கிளுடன் நீங்கள் சந்தோஷமாக இல்லையா?”
“அப்படி சொல்வதற்கில்லை”
இது என்ன பதில் என கண்ணன் ஆச்சரியப்பட்டான்.
அவர் ஒரு சின்ன குழந்தை போல நானில்லாமல் ஒரு நாள் கூட கழிவது
கஷ்டம். கடைக்கு இன்று போகவில்லை என்பவரை தினமும் தள்ளித்தான் விட வேண்டியிருக்கிறது.
என்னை எதற்கும் நிற்பந்தப்படுத்துவது இல்லை. தினமும் சரசம் நடக்கிறது தூக்க மாத்திரை
போடுவது போல... உடம்பு ரொம்ப பெருத்துவிட்டது மிகுந்த சிரமப்படுகிறார். அத்தனைக்கும்
என் உதவி தேவைப்படுகிறது.
கண்ணன் பேச்சை மாற்ற ஆசைப்பட்டான்
“யாரந்த பெரியவர் ? என்ன தண்டனை ? எதற்கு
தண்டனை ? “
“அது தான் சொன்னேனே இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று”
“எப்போதாவது சொல்வீர்களா அல்லது சொல்லவே போறதில்லையா?”
“சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்”
இந்த பிடிவாதம் மட்டும் எனக்கு கொஞ்சம் பிடிப்பதில்லை
நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின்
வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில்
அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.
“எங்கப்பா நல்ல மனிதர் தானே கல்யானி”
என்ன இப்படி கேட்டு விட்டாய் அவர் பண்பால் உயர்ந்த
மனிதர்
அப்பாடாவென்றிருன்தது. அவரில்லை. முகபாவனை உண்மை
சொல்வதய்பட்டது. எப்படியாவது கேட்டு அது யாரென்று தெரியாவிட்டால் மண்டை உடைந்து விடும்
போலிருந்தது.
- தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக