செவ்வாய், 14 ஜனவரி, 2014

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்-4

4

காரியம் முடித்து சீக்கிரம் வாடிக்கையாளரை அனுப்புவதிலயெ குறியாயிருக்கும் ராணி இன்று அவன் தன்னருகில் விழுந்து கிடக்க ஆசைப்பட்டாள். அது இது என்று அக்ரினையில் அழைக்க கஷ்டமாக இருந்தது 

உங்களை naav என்று கூப்பிட்வா

ஏன்?

இல்லை திருநாவுக்கரசு ரொம்ப  நல்ல பெயர் தான் ஆனால் நீளம் . அரசுன்னா கர்நாடகமா இருக்கு திருன்னா  தமிழ் ஐயா போலிருக்கிறது அதனால் தான்

கூப்பிடேன் என்னை அப்படி யாரும் அழைப்பதில்லை . நான் ஒருவேளை என் நாவை பாராட்டி தான் அப்படி அழைக்க நினைத்தாயோ என நினைத்தேன்.

சீ - லைட்டரை தூக்கி எறிந்தாள்.

அப்பண்ணா பிடிக்கலையா, கண்கள் சொக்கிக்கிடந்தன?

மனசும் உடம்பும் ஒரு சேர ஒரு உவகைக்களிப்பில் ராணி தனக்கு அப்படியே உயிர் பிரிந்து விட்டால் நிம்மதி என நினைத்தாள். அவனிடம் அதைசொன்னாள். கண்ணில் நீர் கோர்த்திருந்தது

Come on. கிளம்பு  போர்ட்கொச்சின் வரைப்போயி பிஷிங் நெட்டு ஓரமா கொஞ்சம் நடந்துட்டு பிஷ் பிறை சாப்டுட்டு வரலாம்.

உற்சாகமாக கிளம்பி காரில் ஏறினர் ஊர்ந்து ஊர்ந்து கோட்டையை அடைந்தனர் இறங்கி காலாற நடந்தனர் கடலை மாங்காய் எல்லாம் வாங்கி கொடுத்தான் சிறு பிள்ளைகள் போல சுற்றி திரிந்தனர் கல் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்.

அவன் அவள் சத்தத்தை குறைத்து பேச சொன்னான். காரமான பொரித்த மீன் தின்று புரை எரியவளை தலையில் தட்டிக்கொடுத்தான். வெத்தலை உன்னை தேடுதுன்னு கடுப்பேத்தினான். இவனோடு இப்போதே இந்த கடல் வழியாக எங்கோ போய்விடலாம் என நினைத்தாள்.சந்தோஷமான நேரங்கள் விரைந்து போய்விடும்.

இரவு உண்வுக்கு  ஒரு திறந்த வெளி ரெஸ்டாரண்டில் நுழைந்தனர். சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்றவன் மங்கிய ஒளியில் அவளை உத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். நழுவிய சேலையை அவள் சரிபடுத்த முயன்றவளை கண்ணாலேயே தடுத்தான் அவ்வளவு தாழ்த்தி வெட்டிய டய்லரை மனதுக்குள் வாழ்த்தினான் அவள் செயினின் டாலர் இரண்டும் சேருமிடத்தில் ஆடிக்கொண்டிருந்தது பள்ளத்தில் சிறிது வியர்த்திருந்தது மேலும் போதையஊட்டியது. தான் அந்த டாலராக ஆசைப்பட்டான்

ஏன் சிரிக்கிறாய் நாவ்

இல்லை அந்த டாலர் கொடுத்து வைத்ததென நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது

கவிதை எல்லாம் எழுதுவீங்களோ? கைகளை நெருக்கி சிறிது திரட்சியை கூட்டி அவனை திணரடித்தாள்

“காதலில் கவிதை வரத்தானே செய்யும்

“என்னையும் யாராவது காதலிப்பார்களா என்ன“

“உண்மை தான் சொன்னேன் ராணி என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை

“இவ்வாறு என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள்

“பலருள் நானும் ஒன்றாக தெரிகிறேனா

“அதுமட்டும் இல்லை ஆனாலும்...

“உடனே வேண்டாம் யோசித்து சொல்

நீ ஏதோ கிறக்கத்தில்  மாறுபட்ட மனநிலையில் இவ்வாறு கேட்கிறாய்  போட் ஹவுஸ் நல்லா இருந்தாலும் அதிலேயே வாழ முடியாது. ஒன்றிரண்டு  நாட்களுக்கு மிகவும் ரசிக்கும் படியானது தான். நான் கெட்டுப்போனவள். உனக்கு நல்ல பெண் கிடைப்பாள். நீ  என்னை வப்பட்டியாய் விரும்பினால் மாதம் ஒரு தொகை கொடு வெத்தலை அனுமதிபாள்

அவ உனக்கு அம்மா தானே தன பெண்ணுக்கு ஒரு வாழ்கை அமைந்தால் விரும்ப மாட்டாளா  உன்மேல் அவளுக்கு அக்கறை இல்லையா

அக்கறை இருக்கிறது என்னை நல்லாத்தான் வழர்த்தா ஒருத்தருக்கும் தெரியாமல்
நல்ல கான்வென்ட் ஸ்கூலுல சேர்த்திருந்தா நடக்க விடவில்லை ஆட்டோ காரர்களிடம் சொல்லி வைத்திருந்தாள் அவளுக்கு பயமிருந்தும் அவர்கள் பார்வையில் இருந்த ஏளனம் என்னை கொன்று போட்டது. அவள் இளமையாக இருக்கும் போது சம்மதித்திருக்கலாம் இப்போது நான் அவளுக்கு மூலதனம்.

ஓன்று என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லை அல்லது இந்த உல்லாச வாழ்கை உனக்கு பிடித்திருக்கிறது.

அதெல்லாம் இல்லை எங்காவது ஓடிப்போயி பிச்சஎடுத்தாவது வாழலாம்னு நினைத்ததுண்டு. அப்படி என்ன என் மேல, என்னையும் ஒருவன் மனைவியாய் கேட்கும் அளவுக்கு என்னிடம் எதுவுமில்லை

கண்டதும் காதல் எல்லாம் இல்லை கண்டதும் காமுருவதற்கு தான் வந்தேன் வர்கீஸ் டிவி நடிகை எற்பாடு செய்வதாய் சொன்னான். பொய்யான சந்தோஷங்களை பார்த்து புளித்து விட்டது ராணி.

வாழ்கையில் எந்த பிடிப்பும் இன்றி கூடிய சீக்கிரம் தற்கொலை செய்து விடுவேனோ என்ற பயம் வருகிறது என்னோடு நெருங்கி வரும் எந்த பெண்ணையும் என்னால் நம்ப முடியவில்லை.

நான் உனக்கு விசுவாசம்மாக இருப்பேன் என என்ன உத்தரவாதம்.

ஒரு உத்திரவாதமும் நான் கேட்கவில்லை. ஒரு வற்புருத்தலுமில்லை  என்றைக்கு பிடிக்க வில்லையோ திரும்பி வந்துவிடு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் சமைக்க வேண்டாம்.

பின் புணர்ச்சிக்கு மட்டும் தானா

உனக்கு எப்படி புரிய வைப்பேன் ராணி. நீயாக விருப்பபடாமல் உன்மீது மூச்சு கற்று கூட விடமாட்டேன்.

“என்ன குழந்தை மாதிரி சட்டையில் கறி ஆக்கிவிட்டாய்

கைக்குட்டையால் துடைத்து விட்டாள் அந்த செயலில் இருந்த உரிமை அவனை நெகிழ்த்தி விட்டது பிங்கர் பவுலில்  கைகழுவி   ஆளுக்கொரு  ஐஸ்கிரீம்   சொல்லிவிட்டு  பக்கெட்டை  பார்த்தல்  ஒரு சிகரெட்  தானிருந்தது  ராணி  பற்றவைப்பதை  சர்வரும்   சுற்றிஇருந்த சிலரும்  விநோதமாக  பார்த்தனர்  

ரெண்டு  இடுப்பு  இழுத்துவிட்டு  அவனிடம்  கொடுத்தாள்  அடுத்தவர்கள்  பார்க்க  வேண்டுமென்றே  செய்தாள் அவன்  தயங்குகிறானா இல்லை  ஏதும்  கண்டிக்கிறானா என்று  தெரிந்து  கொள்ள ஆசைப்பட்டாள். ஆசையுடன் வாங்கி எச்சில் தம்மடிக்கும் அவன் மேல் இரக்கம் வந்திருந்தது

ரெண்டு நாளாச்சே இன்னைக்கு திரும்பி போறமா? ராணிக்கு தன்குரலே அன்னியமாகப்பட்டது.

நான் கூட ரெண்டு நாள் சொல்லிவிட்டேன் உனக்கு பிடிக்கலைனா போயிறலாம்

அதை கேட்காததுபோல எனக்கு ஐஸ்க்ரீம் பிடிச்சிருக்குன்னு ஒரு தினுசாய் நக்கினாள் அவனை வம்பிக்கிழுக்கும் ஆசை வந்திருந்தது

"நீ கேட்டதுக்கு ஒத்துக்கலாம் போலிருக்கே நாவ்" என்று திடுதிப்பென்று சொன்னாள். கூட ரெண்டு நாளுக்கா இல்லை துபாய் வருவதற்க்கா எனகுழப்பம் எதுவென்றாலும் நல்லது தான்.



- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக