செவ்வாய், 14 ஜனவரி, 2014

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்-5

                                                         5


நம்ப முடியாதவனாக ங்கே என முழித்த அவன் பொது இடம் என்பதையும் மறந்து அவள் கைகளை பற்றி முத்தமிட்டான் ஒரு முழு நோட்டு டிப்ஸ் வைத்தான். ஹோட்டலுக்கு போன் பண்ணி போட் ஹவுஸ் ஏற்ப்பாடு பண்ணினான் வரும் வழியில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டு உற்சாகமாக திரும்பி ரூம் வந்தனர்.

உடைமாற்றி கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர்  தம்மடித்தாயிற்று இருவரும் பேசவே இல்லை மவுனம் கனமாக நிலவியிருந்தது  ஹுமிடிட்டியால் சிறிது கசகசத்தது 

“நாவ் ஒரு குளியல் போட்டால் என்ன
என கேட்டதும் உடைகழற்றி ரெடியானான் வெதுவெதுப்பான தண்ணீரில் இருவரும் சேர்ந்தே குளித்தனர். தன்னை அவன் பேணுவதே இல்லை எனப்பட்டது. சதைப்பிடிப்பும் சிறிய தொப்பையுமாய் இருந்தான் உடல் முழுவதும் ரோமங்கள். ராணி அவனுக்கு சோப்பு போட்டாள் முதுகு தேய்த்தாள் அழுக்கு வெள்ளை நுரையின் நிறம் மாற்றியிருந்தது  தான் எடுத்த முடிவு சரியானது தான் என நினைத்துக்கொண்டாள் இருவரும் ஒரு துண்டு துணியில்லாமல் இருந்தும் அங்கு எந்த ஈர்புமில்லாமல் நிர்வாணம் இயல்பாய், பாசாங்குமின்றி அவதரித்திருந்தது.

துடைத்து விட்டாள் புதிய டிரஸ் எடுத்துக்கொடுத்தாள் தான் மனைவி ஆகிவிட்டோமா அல்லது இவன் சிறுகுழந்தையா? கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர். தம் வேண்டாமென்றான் கண்ணைக்கிரக்குகிரதென்று படுத்து சடுதியில் தூங்கிப்பொனான்.

 ராணிக்கு தூக்கம் வரவில்லை அதிகப்படியான புகைத்தலால் இருமல் வந்தும் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்தாள் 

காலையில் ரேசெப்சனில் இருந்து கால் வந்து தான் விழித்தனர் ஒன்பது மணியாயிருந்தது கிளம்பி போட் ஹவுஸ் போகும் வழியில் பேச்சே இல்லை

ஒரு பலகைப்பாலத்தில் அந்த போட் ஹவுஸ் உள் ஏறும்போது ஆடியது கைகொடுத்து ஏற்றிவிட்டான் பிள்ளைகள் இல்லாமல் வந்த இருவரையும் ஓட்டுனரும் கெல்பரும் நிமிட ஸ்கேன் பண்ணி  வித்தியாசமாக பார்பதாக பட்டது. வித்தியாசமான பார்வைகள் முன்பெல்லாம் சலனம் ஏற்படுத்தியதில்லை

இரு அறைகளும் பின்புற சாளர இருக்கைக்களுமாக போதிய தனிமை இருந்தது குளிர் சாதன வசதி இருந்தது  படுக்கை அறை விசாலமாக அலங்காரமாக இருந்தது.

வரவேற்ப்பு டிரிங்க்ஸ் கொடுத்தனர் போட் மெதுவாக ஆடி ஆடி வாத்து போல நீரில் மிதந்து சென்றது. ராணி ஆவலாக பார்த்துக்கொண்டு வந்தாள். அவன் ராணியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நீ இங்கு வந்ததில்லையா ராணி உங்க ஊர் தானே

இல்லைப்பா, அதுக்கெல்லாம் வெத்தலை அனுப்ப மாட்டா. ஒரு குருப்பாதான வருவார்கள் அவர்களை சமாளிக்க தெரிந்த ஒன்றிரண்டு ஸ்பெசளிச்டுகள் தனியாக உண்டு. பேசியது போக டிப்ஸ் தனியாக பேசிக்கொள்வார்கள். உடம்பு அலுப்பில் தண்ணி அடிச்சுட்டு ரெண்டு நாள் தூங்குவார்கள்.

“ஆமா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே

“இல்லை என்ன வேணா கேளு ராணி நீ எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்

“இவ்வளவு நல்ல மனுசனா இருக்கியே உன் பொண்டாட்டி ஏன் ஒன்னை விட்டுட்டு போய்ட்டா

அவன் பதில் சொல்லாமல் ஒரு தம் பத்தவைத்தான் ராணி வேண்டாமென்று விட்டாள் 

அவள் எனக்கேற்ற பெண்ணில்லை என்றாலும் நான் அவளை நன்றாக நடத்தவில்லை ராணி, அவளை சந்தேகப்பட்டேன் அவள் என்னிடம் மறைத்த பழைய காதலை கண்டுபிடித்தேன்.

“யாருக்கு தான் பழைய காதல் இல்லை நாவ்

“பிரச்சனை என்னிடம் தானென புரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது
என்னோடு வாழுதல் உசிதமில்லை என முடிவெடுத்து விட்டு கருவையும் அபார்ட் பண்ணி விட்டாள். அவள் போன  பிறகு எனக்கு மனோசிகிட்சை வேண்டியிருந்தது  என் மோசமான குழந்தை பருவம் என்னில் ஏற்படுத்திய வடுக்களை நீக்க மிகவும் பாடுபட்டேன், பாடு பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.

போட் குக் பழம்பூரியும் ப்ளாக் டீயும் தந்துவிட்டு போனார். ஒரு பெல் அடித்து விட்டு ரெண்டு நிமிடம் பிறகு தான் வருகிறார்கள். மட்டசோறும் கரிமீனும் சாப்பிடுவீர்கள் தானே என்று உறுதிப்படுத்திவிட்டுபோனார்

முகம்  சுருங்கி  வருத்தப்பட்டு விட்டவனை தன் மடியில் சரித்துக்கொண்டாள் இனி ஒரு கேள்வியும் கேட்கப்போவதில்லை என உறுதியளித்தாள். மெல்ல  முத்தமிட்டாள் அவன் அழுத்தி   முத்தமிட்டான்  வாயில் மென்றுகொண்டிருந்த பளப்பத்திரியை அவன் நாவால் தன்பக்கம் எடுத்துக்கொண்டான். கீழ் உதடுகளை உறுஞ்சினான்
அவள் அவன் நெஞ்சை தடவிக்கொடுத்தாள் முடியை கலைத்து விளையாடினாள் காம்புகளை தடவி விட்டாள். கையை கீழே நீட்டிப்பர்த்தாள் எட்டவில்லை அவன் சிறிது மேலேறிப்படுத்தான் முகம் மார்பருகில் வந்து விட்டிருந்தது. அப்படியே குனிந்து அவனை மூச்சு முட்ட வைத்தாள் அதையும் மீறி அவன் கடிக்கப்பார்த்தான்.

அவன் கைகள் அவள் மேல் ஊர ஆரம்பித்த சமயத்தில் பெல் ஓசை கேட்டது. விலகிக்கொண்டனர். லஞ்சுக்காக ஒரு இடத்தில் நிறுத்தினர் கரையும் ஒன்றிரண்டு கடைக்களுமிருந்தன  தண்ணீர் தெளிவாக இருந்தது  மக்கள் குளித்துகொண்டிருந்தனர். குளிக்கலாமா என ராணி கேட்டாள் தயங்கியவனை பிடித்து இழுத்தாள் குதித்தாள் அவன் கைதொட துடித்த அவைகளும் குதித்தன.


- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக